×

நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்..!!

சேலம்: நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் அணி வீரராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடராஜன். சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரராக உயர்ந்ததோடு மட்டுமில்லாமல் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பச்சப்பட்டி அருகே 4.5 ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி இருக்கிறார்.

நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். அவருடைய தாய், தந்தை முன்னிலையில் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

The post நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்..!! appeared first on Dinakaran.

Tags : Dinesh Karthic ,Natarajan Cricket Academy ,Salem ,Natarajan Cricket Ground ,Salem District ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...